அவதார்!
கேள்வி:
திருமால் அவதாரங்களை ஏன் பாரதத்தில் மட்டும் எடுக்கவேண்டும்? மற்ற நாடுகளில் ஏன் எடுக்கவில்லை?
பதில்:
ஜீசஸ் ஏன் இந்தியாவில் பிறக்கவில்லை? முகம்மது நபிகள் ஏன் பாரதத்தில் பிறக்கவில்லை? இதற்கெல்லாம் பதில் தெரிகிறபொழுது, உங்கள் கேள்விக்கும் பதில் தெரிந்துவிடும். (- துக்ளக், 13.11.2013)
பொதுவாக ஆர்.எஸ். எஸ்.காரர்கள் சொல்லும் பதில்தான் இது! என்னதான் தன்னை மறைத்துக் கொண்டாலும் திருவாளர் சோ ராமசாமி இதுபோன்ற பதில்கள் மூலம் அவரை அறியாமலேயே, தான் ஒரு ஆர்.எஸ். எஸ்.காரர் என்பதை தனக்குத்தானே தனது முகமூடியைக் கிழித்துக்கொண்டு அம்பலப்படுத்திக் கொண்டு விடுவார். அதற்கு இந்தப் பதிலே போதுமானதுதான்.
இந்தப் பதிலில் சாரம் இருக்கிறதா, இல்லையா? என்பது ஒருபுறம் இருக்கட்டும்; இந்த பதில் வேண்டுமானால் கிறித்தவர், முஸ்லிம்களை நோக்கிக் கூறப்பட்டதாக வைத்துக் கொள்வோம்.
இவர்களைத் தாண்டி இந்தக் கேள்வியைக் கேட்டால் திருவாளர் சோவிடம் அதற்கான அறிவு நாணயமான உரிய பதில் - சரக்கு கிஞ்சிற்றும் இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகிவிட் டது.
இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கே இந்த சந்தேகம் வந்து கேள்வி கேட்பதாக வைத்துக்கொள்வோம்.
அவருக்கு சோவின் பதில் திருப்தி அளிக்க முடியுமா?
கடவுள், மதங்களில் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவுவாதிகள் இந்த வினாவைத் தொடுப்பதாக வைத்துக் கொள்வோம். அவர்களுக்கு சோ அளித்த பதில் ஏற்புடையதல்லவே!
உங்கள் மதத்தைப்பற்றிக் கேள்வி கேட்டால், அதற்கும் நேரடியாகப் பதில் சொல்ல முடிந்தால், அதற்கு பெயர் தான் ஏதோ சரக்குள்ளவர் என்பதற்கான அடையாளம்.
நீ குற்றவாளியா என்று கேட்டால், அவனும்தான் குற்றவாளி என்கிற பதில் மூலம் தன்னைக் குற்றவாளி என்று அப்பட்டமாக ஒப்புக் கொண்டதாகத்தானே பொருள்.
அவதார் என்றால் மேலே இருந்து கீழே இறங்குவது என்று பொருள். அந்த மேலே இருந்து, இந்துக் கடவுள் இந்தியாவில் மட்டும்தான் இறங்கவேண்டுமா? உங்கள் இந்து மதக் கடவுள் இந்தியாவுக்கு மட்டும்தானா? அதுவும் முஸ்லிம், கிறித்தவர், பகுத்தறிவுவாதிகளை நீக்கி மற்றவர்களுக்கு மட்டும்தான் கடவுளா?
கடவுள்கள் ஏரியாக்களைப் பிரித்து வைத்துக் கொண்டு விட்டார்களா?
இந்த உலகத்தைக் கட வுள் படைத்தார் என்பதெல்லாம் புரூடாதானே? ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி என்பதெல்லாம் புலவர்களின் கைச்சரக்கு என்பதை மறைமுகமாகவாவது சோ ஒப்புக்கொண்டுவிட்டாரா இல்லையா?
- மயிலாடன்
கேள்வி:
திருமால் அவதாரங்களை ஏன் பாரதத்தில் மட்டும் எடுக்கவேண்டும்? மற்ற நாடுகளில் ஏன் எடுக்கவில்லை?
பதில்:
ஜீசஸ் ஏன் இந்தியாவில் பிறக்கவில்லை? முகம்மது நபிகள் ஏன் பாரதத்தில் பிறக்கவில்லை? இதற்கெல்லாம் பதில் தெரிகிறபொழுது, உங்கள் கேள்விக்கும் பதில் தெரிந்துவிடும். (- துக்ளக், 13.11.2013)
பொதுவாக ஆர்.எஸ். எஸ்.காரர்கள் சொல்லும் பதில்தான் இது! என்னதான் தன்னை மறைத்துக் கொண்டாலும் திருவாளர் சோ ராமசாமி இதுபோன்ற பதில்கள் மூலம் அவரை அறியாமலேயே, தான் ஒரு ஆர்.எஸ். எஸ்.காரர் என்பதை தனக்குத்தானே தனது முகமூடியைக் கிழித்துக்கொண்டு அம்பலப்படுத்திக் கொண்டு விடுவார். அதற்கு இந்தப் பதிலே போதுமானதுதான்.
இந்தப் பதிலில் சாரம் இருக்கிறதா, இல்லையா? என்பது ஒருபுறம் இருக்கட்டும்; இந்த பதில் வேண்டுமானால் கிறித்தவர், முஸ்லிம்களை நோக்கிக் கூறப்பட்டதாக வைத்துக் கொள்வோம்.
இவர்களைத் தாண்டி இந்தக் கேள்வியைக் கேட்டால் திருவாளர் சோவிடம் அதற்கான அறிவு நாணயமான உரிய பதில் - சரக்கு கிஞ்சிற்றும் இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகிவிட் டது.
இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கே இந்த சந்தேகம் வந்து கேள்வி கேட்பதாக வைத்துக்கொள்வோம்.
அவருக்கு சோவின் பதில் திருப்தி அளிக்க முடியுமா?
கடவுள், மதங்களில் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவுவாதிகள் இந்த வினாவைத் தொடுப்பதாக வைத்துக் கொள்வோம். அவர்களுக்கு சோ அளித்த பதில் ஏற்புடையதல்லவே!
உங்கள் மதத்தைப்பற்றிக் கேள்வி கேட்டால், அதற்கும் நேரடியாகப் பதில் சொல்ல முடிந்தால், அதற்கு பெயர் தான் ஏதோ சரக்குள்ளவர் என்பதற்கான அடையாளம்.
நீ குற்றவாளியா என்று கேட்டால், அவனும்தான் குற்றவாளி என்கிற பதில் மூலம் தன்னைக் குற்றவாளி என்று அப்பட்டமாக ஒப்புக் கொண்டதாகத்தானே பொருள்.
அவதார் என்றால் மேலே இருந்து கீழே இறங்குவது என்று பொருள். அந்த மேலே இருந்து, இந்துக் கடவுள் இந்தியாவில் மட்டும்தான் இறங்கவேண்டுமா? உங்கள் இந்து மதக் கடவுள் இந்தியாவுக்கு மட்டும்தானா? அதுவும் முஸ்லிம், கிறித்தவர், பகுத்தறிவுவாதிகளை நீக்கி மற்றவர்களுக்கு மட்டும்தான் கடவுளா?
கடவுள்கள் ஏரியாக்களைப் பிரித்து வைத்துக் கொண்டு விட்டார்களா?
இந்த உலகத்தைக் கட வுள் படைத்தார் என்பதெல்லாம் புரூடாதானே? ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி என்பதெல்லாம் புலவர்களின் கைச்சரக்கு என்பதை மறைமுகமாகவாவது சோ ஒப்புக்கொண்டுவிட்டாரா இல்லையா?
- மயிலாடன்








0 comments:
Post a Comment